தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
31/03/2025 காலை 7:30 மணிக்கு MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி முன்புறம் உள்ள MP நகர் பார்க் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து சகோ. அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்
ஏராளமானோர் தமது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
வெறுப்பு கூச்சல் இல்லை!
ஊர்வலம் என்கிற பெயரில் யாருடை வழிபாட்டுத்தலத்தையும் சேதப்படுத்த வில்லை!
பொதுமக்கள் யார் மீதும் கலர் சாயம் பூச வில்லை!
எந்த மனிதரையும் காயப்படுத்தவில்லை!
காற்றை மாசு படுத்தவில்லை!
நீரை மாசுபடுத்தவில்லை!
அதிக ஒலி எழுப்பக் கூடியவைகளால் யாருடைய உடல் ஆரோக்கியத்தை கெடுக்கவில்லை!
அமைதியாய் சென்றோம்!
இறைவனை தொழுதோம்!
அவனுக்கே நன்றி செலுத்தினோம்!
இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், இயன்றதை தர்மம் செய்தோம்!
உணவுப் பொருட்களை வாரி வழங்கினோம்!
நாங்களும் மகிழ்ந்தோம்!
பிறரையும் மகிழ்ச்சி படுத்தினோம்!
எங்களை பண்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
அவனே மிகப்பெரியவன்!



No comments:
Post a Comment