தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் பொது மஷூரா 19/09/25 அன்று உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில் மஃரிப் தொழுகைக்கு பின்பு தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஷீத் முன்னிலையில் நடைபெற்றது
இதில் கீழ்க்கண்ட விஷயங்கள் மஷூராவில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது .
📌 இன்ஷா அல்லாஹ் வரும் 26/09/25 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்பு நடத்தவுள்ள இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து மக்களை அழைப்பதென்றும், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என்றும்,
📌 இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 மதுரையில் நடக்க இருக்கும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு உடுமலை நகர கிளை சார்பாக *மக்களை திரட்டி வாகனங்களில் அழைத்து* செல்ல அனைவரும் ஒத்துழைப்பதென்றும்,
📌 மேற்கண்ட நிகழ்ச்சி மற்றும் தாவா பணி செலவீனங்களுக்கு பொருளாதார ஒத்துழைப்பு வழங்குவது என்றும்
இன்னும் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டு ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment