தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின்
நிர்வாக மஷூரா 20/09/25 சனிக்கிழமை இரவு 9:00 மணி முதல் M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கீழ்க்கண்ட விஷயங்கள் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது
📌 கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் 26/09/25 வெள்ளிக்கிழமை அன்று நடத்தவுள்ள இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான பணிகள் பற்றி ஆலோசித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
📌 UKC நகர் மதரஸா மாணவ, மாணவியர் - பெற்றோர் சந்திப்பு நடத்துவது என்றும்
📌 இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 மதுரையில் நடக்க இருக்கும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு உடுமலை நகர கிளை சார்பாக பெரும் திரளான மக்களை திரட்டி செல்ல ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
இன்னும் அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete