தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
20/10/2025 திங்கள் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 36-39
உமது சமுதாயத்தில் (இதுவரை) இறைநம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி யாரும் இறைநம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றிக் கவலைப்படாதீர்! நமது கண்களுக்கு முன்பாகவும், நமது அறிவிப்பின்படியும் கப்பலைக் கட்டுவீராக! அநியாயக்காரர்கள் தொடர்பாக என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்!” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவரது சமுதாயப் பிரமுகர்கள் அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால், (இப்போது) நீங்கள் கேலி செய்வதைப் போன்று (விரைவில்) நாங்களும் உங்களைக் கேலி செய்வோம். இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், நிலையான தண்டனை யார்மீது இறங்கும் என்பதையும் அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று அவர் கூறினார்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment