தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
28/10/2025 செவ்வாய் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 54-56
எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குத் தீங்கை ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்கிறோம்” (என்றும் கூறினர்.) “நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன். அவனை விட்டுவிட்டு, நீங்கள் (அவனுக்கு) எதனை இணையாக்குகின்றீர்களோ அதனைவிட்டும் நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாக இருங்கள்! நீங்கள் அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (அதன்) பின்னர் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.
என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் முன்நெற்றியை அவனே பிடித்து வைத்துள்ளான். என் இறைவன் நேரான வழியில் உள்ளான்”
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment