தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
17/10/2025 வெள்ளி பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 31
அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் இருப்பதாக உங்களிடம் கூற மாட்டேன். நான் மறைவானதை அறியவும் மாட்டேன். நான் ஒரு வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கின்றனவோ, அவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ்வே நன்கறிந்தவனாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் வழங்கவே மாட்டான் என்றும் நான் கூற மாட்டேன். அவ்வாறு கூறினால் நான் அநியாயக்கார்களில் ஒருவனாகி விடுவேன்” (என்று நூஹ் கூறினார்)
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment