தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
07/11/2025 வெள்ளி பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 78-79
அவரது சமுதாயத்தினர் விரைந்து அவரிடம் வந்தனர். இதற்கு முன்பும் அவர்கள் கெட்ட செயல்களைச் செய்வோராக இருந்தனர். “என் சமுதாயத்தினரே! இவர்கள் எனது புதல்வியர். இவர்கள் உங்களுக்கு (மணமுடிக்கத்) தூய்மையானவர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனது விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள். உங்களில் ஒரு நல்ல மனிதர் கூட இல்லையா?” என்று கேட்டார்.
எங்களுக்கு உம்முடைய புதல்வியரிடம் எந்தத் தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர். நாங்கள் எதை விரும்புகிறோம் என்பதையும் நீர் அறிந்தே இருக்கிறீர்!” என அவர்கள் கூறினர்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment