தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக
உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்
19/11/2025 புதன் மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். அப்துல்ரஷீத் அவர்கள் "பாதைக்கான உரிமை" எனும் தலைப்பில்
நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் (ரலி)
(புகாரி: 2465)
என்பதை விளக்கி உரையாற்றினார்கள்.
சகோதர சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment