20 December 2025

குர்ஆன் வகுப்பு_12: வசனம் 44- 46_ 20122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


20/12/2025 சனிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 12: வசனம் 44- 46


 இவை குழப்பமான கனவுகள். இக்கனவுகளின் விளக்கத்தை நாங்கள் அறிந்தவர்கள் அல்ல!” என அவர்கள் கூறினர்.


அவ்விருவரில் விடுதலை பெற்றவர், வெகு காலத்திற்குப் பின்பு ஞாபகம் வந்து, “அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை (யூஸுஃபிடம்) அனுப்புங்கள்!” என்று கூறினார்.


யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்பது பற்றியும், பசுமையான ஏழு கதிர்கள் பற்றியும், காய்ந்துபோன வேறு கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் கூறுவீராக! மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் (விளக்கத்துடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டும்” (என்று அவர் கூறினார்.)


 என்பதைப் படித்து விளக்கம் கூறினார்கள்


 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment